சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.005   சேந்தனார் - திருவீழிமிழலை  
பண் -   (திருத்தலம் திருவீழிமிழலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.005 சேந்தனார் - திருவீழிமிழலை   (திருவீழிமிழலை )
ஏகநா யகனை இமையவர்க் கரசை
   என்னுயிர்க் கமுதினை எதிர்இல்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
   பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
   மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
   உண்டென உணர்கிலேன் யானே. 

[1]
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
   கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
   மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
   திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
   குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

[2]
மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
   மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
   கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
   திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
   குறுகவல் வினைகுறு காவே. 

[3]
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
   சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
   எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
   மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
   விடுவனோ பூண்டுகொண் டேனே.

[4]
இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்
   பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
   புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
   மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
   அறிவரோ அறிவுடை யோரே. 

[5]
அக்கனா அனைய செல்வமே சிந்தித்
   தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
   புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
   மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
   பொடியணிந் தடிமைபூண் டேனே.

[6]
கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
   கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
   மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
   நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
   வருந்திநான் மறப்பனோ இனியே.

[7]
ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
   கண்முக கரசர ணத்தோன்

[8]

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.006   சேந்தனார் - திருவாவடுதுறை  
பண் -   (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
   புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
   மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
   யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
   றருளா தொழிவது மாதிமையே.

[1]
மாதி மணங்கம ழும்பொழில்
   மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
   சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
   அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
   திண்டோள் புணர நினைக்குமே. 

[2]
நினைக்கும் நிரந்தர னேயென்னும்
   நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
   நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
   மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
   தருணேந்து சேகரன் என்னுமே. 

[3]
தருணேந்து சேகர னேயெனுந்
   தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
   புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
   துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
   திலக நுதலி திறத்திலே.

[4]
திலக நுதல்உமை நங்கைக்கும்
   திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
   கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
   அணியும்வெண் ணீறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
   வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே. 

[5]
வேந்தன் வளைத்தது மேருவில்
   அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
   பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
   கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
   யான்செய்கை யார்அறி கிற்பரே.

[6]
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
   கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
   என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
   கருணால யாவந்தி டாய்என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
   துறையாளி பேசா தொழிவதே. 

[7]
ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
   உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
   முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
   அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
   றிறுமாக்கும் என்னிள மானனே. 

[8]
மானேர் கலைவளை யுங்கவர்ந்
   துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
   சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
   கருத்தை முடித்திடுங் குன்றமே. 

[9]
குன்றேந்தி கோகன கத்தயன்
   அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
   இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
   நவலோக நாயகன் பாலளே. 

[10]
பாலும் அமுதமும் தேனுமாய்
   ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
   புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
   திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
   அறிந்தோம் அரிவைபொய் யாததே.

[11]

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.007   சேந்தனார் - திருவிடைக்கழி  
பண் -   (திருத்தலம் திருவிடைக்கழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
   வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
   குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
   என்னும்என் மெல்லியல் இவளே. 

[1]
இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
   எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
   கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
   குழகன்நல் லழகன்நம் கோவே. 

[2]
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
   குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்
காவனற்சேனை யென்னக்காப் பவன்என்
   பொன்னைமே கலைகவர் வானே
தேவினற் றலைவன் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூருஞ்
   சுப்பிர மண்ணியன் றானே.

[3]
தானமர் பொருது தானவர் சேனை
   மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
   மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலஇளங் களிறென்
   கொடிக்கிடர் பயப்பதுங் குணமே. 

[4]
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
   படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
   உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
   கணபதி பின்னிளங் கிளையே. 

[5]
கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
   ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
   கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக்
   கருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 

[6]
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
   பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
   சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
   மையல்கொண் டையுறும் வகையே. 

[7]
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
   வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
   பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
   துடியிடை மடல்தொடங் கினளே. 

[8]
தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்
   புறஇத ழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
   மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்
   தறுமுகத் தமுதினை மருண்டே. 

[9]
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
   பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே
   விடலையே எவர்க்குமெய் யன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
   கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 

[10]
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
   தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
   வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
   இடர்கெடும் மாலுலா மனமே. 

[11]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool