9.005 சேந்தனார் - திருவீழிமிழலை (திருவீழிமிழலை ) |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.005  
சேந்தனார் - திருவீழிமிழலை
பண் - (திருத்தலம் திருவீழிமிழலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஏகநா யகனை இமையவர்க் கரசை என்னுயிர்க் கமுதினை எதிர்இல் போகநா யகனைப் புயல்வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.
| [1] |
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
| [2] |
மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியைப் பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க் கெளியதோர் பவளமால் வரையை விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலையூர் ஆளும் கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக் குறுகவல் வினைகுறு காவே.
| [3] |
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுலா மவுலியைத் தானே என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர் மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி மிழலையுள் விளங்குவெண் பளிங்கின் பொன்னடிக் கடிமை புக்கினிப் போக விடுவனோ பூண்டுகொண் டேனே.
| [4] |
இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப் பிறப்பறா இந்திர சாலப் பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த புராணசிந் தாமணி வைத்த மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும் அறிவரோ அறிவுடை யோரே.
| [5] |
அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டழுந்தியான் அவமே புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனைஎண் திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந் தடிமைபூண் டேனே.
| [6] |
கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும் கமழ்பொழில் தழுவிய கழனித் திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ் மாடநீ டுயர்திரு வீழித் தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி நம்பியைத் தன்பெருஞ் சோதி மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை வருந்திநான் மறப்பனோ இனியே.
| [7] |
ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக் கண்முக கரசர ணத்தோன்
| [8] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.006  
சேந்தனார் - திருவாவடுதுறை
பண் - (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாள ராயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய ஐயா திருவா வடுதுறை யமுதேயென் றுன்னை யழைத்தக்கால் மையார் தடங்கண் மடந்தைக்கொன் றருளா தொழிவது மாதிமையே.
| [1] |
மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ் சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும் ஆதி யமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்ற நீதி யறிகிலள் பொன்னெடுந் திண்டோள் புணர நினைக்குமே.
| [2] |
நினைக்கும் நிரந்தர னேயென்னும் நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் மனக்கின்ப வெள்ள மலைமகள் மணவாள நம்பிவண் சாந்தையூர் தனக்கின்பன் ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரன் என்னுமே.
| [3] |
தருணேந்து சேகர னேயெனுந் தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப் பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப் புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள் அருணேர்ந் தமர்திரு வாவடு துறையாண்ட ஆண்டகை யம்மானே தெருணேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே.
| [4] |
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா வடுதுறை நம்பிக்கும் குலக அடியவர்க் கென்னையாட் கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல் அலதொன் றறிகின்றி லேமெனும் அணியும்வெண் ணீறஞ் செழுத்தலால் வலதொன் றிலள்இதற் கென்செய்கேன் வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே.
| [5] |
வேந்தன் வளைத்தது மேருவில் அரவுநாண் வெங்கணை செங்கண்மால் போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புர வித்தேர்ச் சாந்தை முதல்அயன் சாரதி கதிஅருள் என்னுமித் தையலை ஆந்தண் திருவா வடுதுறை யான்செய்கை யார்அறி கிற்பரே.
| [6] |
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக் கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள் சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள் என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி கற்போல் மனங்கனி வித்தஎம் கருணால யாவந்தி டாய்என்றாற் பெற்போ பெருந்திரு வாவடு துறையாளி பேசா தொழிவதே.
| [7] |
ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும் மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும் அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர் அணிஆ வடுதுறை ஆடினாள் இழிவொன்றி லாவகை யெய்திநின் றிறுமாக்கும் என்னிள மானனே.
| [8] |
மானேர் கலைவளை யுங்கவர்ந் துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே தேனே அமுதேஎன் சித்தமே சிவலோக நாயகச் செல்வமே ஆனேஅ லம்பு புனற்பொன்னி அணிஆ வடுதுறை அன்பர்தம் கோனேநின் மெய்யடி யார்மனக் கருத்தை முடித்திடுங் குன்றமே.
| [9] |
குன்றேந்தி கோகன கத்தயன் அறியா நெறிஎன்னைக் கூட்டினாய் என்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள் இளவல்லி எல்லைக டந்தனள் அன்றேஅ லம்பு புனற்பொன்னி அணிஆ வடுதுறை யாடினாள் நன்றே யிவள்நம் பரமல்லள் நவலோக நாயகன் பாலளே.
| [10] |
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காம புராந்தகன் சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த் திருவா வடுதுறை வேந்தனோ டாலு மதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே.
| [11] |
Back to Top
சேந்தனார் திருவிசைப்பா
9.007  
சேந்தனார் - திருவிடைக்கழி
பண் - (திருத்தலம் திருவிடைக்கழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுங் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும்என் மெல்லியல் இவளே.
| [1] |
இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந் தான் இளங்காளை கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவருங் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங் குழகன்நல் லழகன்நம் கோவே.
| [2] |
கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ் சுப்பிர மண்ணியன் றானே.
| [3] |
தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலஇளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே.
| [4] |
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற் றடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே.
| [5] |
கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக் கருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
| [6] |
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத் தரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண் டையுறும் வகையே.
| [7] |
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென் துடியிடை மடல்தொடங் கினளே.
| [8] |
தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற் புறஇத ழாகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத் தறுமுகத் தமுதினை மருண்டே.
| [9] |
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே விடலையே எவர்க்குமெய் யன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
| [10] |
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூமொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் லிவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே.
| [11] |